Tuesday, 31 May 2011

சிரியாவின் கிளர்ச்சிகளில் மாணவர்களும் பங்கேற்பு:


சிரியாவில் புரட்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக ஆயிரக்கணக்கான பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்று திரண்டு வருகின்றனர். டமஸ்கஸில்
ஒன்று கூடிய இம்மாணவர்கள் ஜனநாயக ஆதரவு சக்திகளுக்கு தாம் ஒத்து ழைப்பு வழங்கப் போவதாகக் கூறியுள்ளனர். டமஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து பல மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரம்நீதிஒற்றுமை. இதுவே எமது இலக்கு என்று மாணவர்கள் கோஷம் எழுப்பி யுள்ளனர். மனித உரிமைகளுக்கான சிரியாவின் தேசிய அமைப்பின் தலைவர் அம்மார் குராபிமோதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளார். ஆட்சியிலுள்ள பஷர் அல் அஸதின் பாத் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் புரட்சி புதிய வடிவம் பெறுவதையே மாணவர்களின் ஆதரவுப் போராட்டம் எடுத்துக் காட்டுவதாக அம்மார் குராபி தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அரச படையினரின் அடக்குமுறை தீவிரமடைந்துள்ளது. ஆயினும்புரட்சியாளர்களின் ஆர்ப்பாட் டம் தணியவில்லை. ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதோடு பல பத்திரிகை யாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சிரியாவின் முக்கிய நகரங்களில் பதற்றம் நிலவுவதாகவும் எவ்வேளையிலும் முழுமையான புரட்சி வெடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களுக் கும் அரச படையினருக்கும் இடையிலான மோதலில் அரச படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.



Monday, 30 May 2011

பயங்கரவாதச் செயல்களோடு முஸ்லிம்களுக்குத் தொடர்பில்லை:

     Europol எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் காவல் நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் ஐரோப்பாவில் இடம் பெறும் 99.6 வீதமான பயங்கரவாதச் செயல் களோடு தொடர்புற்றவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஐரோப்பாவில் இயங்கி வரும் தீவிர பிரிவினைவாத அமைப்புகளும் வலதுசாரிக் குழுக்களுமே பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றன என்பதையும் இவ்வாய்வு உறுதிசெய்துள்ளது.
ஐரோப்பிய வன்முறைச் சம்பவங்களோடு முஸ்லிம்களைத் தொடர்புபடுத்தும் ஊடக அறிக்கைகளை ஈரோப்போலின் இவ்வாய்வு பொய்ப்பித்துள்ளது. ஐரோப் பாவில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பீதி’ (Islamophobia) அடிப்படையற் றது என்பதையும் இவ்வாய்வு உறுதிசெய்துள்ளது. பிரான்ஸ்ஸ்பெய்ன் ஆகிய நாடுகளிலேயே அதிகளவிலான பயங்கரவாதக் குழுக்கள் செயற்படுகின்றன.

கணவனுக்குக் கட்டுப்படுதல்

    ஒரு பெண் தனது கணவனுக்கு கட்டுப்படுவது கடமையாகும். அல்லாஹுத்த ஆலா கூறுகின்றான்மனைவியரான அவர்கள்மீதுள்ள கடமைகள் போன்று அவர்களுக்கு உரிமைகளும் காணப்படு கின்றன. ஆண்களுக்கு அவர்கள்மீது ஓர் படித்தரம் உள்ளது. (பகறா: 228)
ஆண்கள் பெண்களைவிட வும் சக்திபடைத்தவர்களாவர். அல்லாஹுத்தஆலா அவர்களில் சிலரைவிடவும் மேன்மையாக்கி சிலரை வைத்திருக்கிறான். அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து பெண்களுக்காக செலவளிக்கின்றார் கள். (நிஸா: 34)
எனவேஒரு பெண் நன்மையான விடயங்களில் கணவனுக்கு கட்டுப்பட வேண்டியது அவளது கடமையாகும். பாவங்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயங்களில் கட்டுப்படக்கூடாது. நபி (ஸல்) அவர்களிடம் பெண் களில் சிறந்தவர் யார்’ எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்அவளைப் பார்த்தால் கணவன் சந்தோசப் படக்கூடிய அவன் ஏவினால் கட்டுப்படக்கூடிய பெண்ணா வாள் என்றார்கள். (நஸாயி)
ஒரு பெண் கணவனின் வீட்டில் நுழைந்ததிலிருந்து அவனுக்கு கட்டுப்பட தொடங்க வேண்டும். அந்த வீட்டை வசதியுள்ளதாக ஆக்க வேண்டும். அல் லாஹ் மிக அறிந்தவன்.



யார் இந்த ரஜினிகாந்த்? - ஏன் இந்த முக்கியத்துவம் செய்திதாள்களில்...?


         May 20, செய்திதாள்களில், இணையதளங்களில், தொலைகாட்சிகளில் எங்கு திரும்பினாலும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை அவர் நலம் அடைய பிராத்தனை, அவர் நலமாக இருக்கிறார் யாரும் கவலைபட வேண்டாம் இப்படி போகிறது செய்திகள்.
யார் இந்த ரஜினிகாந்த்? இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உங்களுக்கு என்ன? ரஜினியின் மனைவி, குடும்பத்தார் படவேண்டிய கவலையை ஏன்? மொத்த தமிழகமும் பட வேண்டும்.
அவர் ஒரு சிறந்த நடிகர், அவர் தன் நடிப்பிற்க்காக கோடிகணக்கில் பணம் வாங்குகிறார். நீங்கள் பணம் கொடுத்து அவர் படத்தை பார்கிறீர்கள். இதுதானே அவருக்கும் உங்களுக்கு உள்ள உறவு. இதை தவிர வேறேதும் இருக்கிறதா? எனக்கு புரியவில்லை உங்களுக்கு புரிந்தால் எனக்கு விளக்கலாம். (sinthikkavum@yahoo.com).
அப்படி என்ன? இவர் பெரும் சமூக போராளியா? ஒரு சமூகத்தின் விடுதலைக்காக பாடுபட்டவரா? நெல்சன் மாண்டலா போல் (கறுப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபட்டவர்) தன் வாழ்நாளின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவரா?
விடுதலைப் போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்  போல் தங்கள் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவரா? பகத் சிங்கா அல்லது நேதாஜியா!! யார் இவர்? ஏன் இந்த ஆர்ப்பாட்டம்!! அவரும் ஒரு சாதாரண இந்திய குடிமகன். ஏன்? இவர் உடல் நலம் சரியில்லை என்பதை மொத்த இந்தியாவுக்கும் காய்ச்சல் வந்ததுபோல் கூப்பாடு போடுகிறீர்கள்.
ஈழத்தில் கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது, குஜராத்தில் நரவேட்டை நரேந்திரமோடியால் ஒரு இன அழிப்பு நடந்த போது, தமிழக மீனவர்கள் கொன்று குவிக்கப்படும் போது இல்லாத ஒரு ஆர்ப்பாட்டத்தை, பரபரப்பை, சோகத்தை, ஏன் உண்டாக்குகிறீர்கள்.
இவரை பற்றி எழுதுகிற, கவலைப்படுகிற, இவருக்காக பிராத்தனை செய்கிற ரசிகர்களையும், அப்பாவி பொதுமக்களையும், வியாபாரம் செய்யும் ஊடகங்களையும், மற்ற அத்தனை நல்ல உள்ளங்களை பார்த்து ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா?
உங்களின் குடும்பங்களில், உறவினர்களில், நண்பர்களில் எத்தனை, எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். உங்கள் அண்டை வீட்டார், உங்கள் தெருவாசி, உங்கள் ஊரை சேர்ந்தவர் எத்தனை பேர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள்.
உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்! இவர்களை போயி பார்த்தவர்கள் எத்தனை பேர்? இவர்களுக்காக பிராத்தனை செய்தவர்கள் எத்தனை பேர்? நலம் விசாரித்தவர்கள், உதவி செய்தவர்கள் எத்தனை பேர்? முதலில் அதை செய்யுங்கள். முதியவர்கள், அனாதைகள் இப்படி எவ்வளவு பேர் இந்த சமூகத்தில் இருகிறார்கள்.
அவர்கள் நலம் அடையவேண்டும், அவர்கள் நலம் பெற நம்மால் முடிந்த உதவிகளை செய்யவேண்டும், அவர்கள் குறித்த அவலங்களை, மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசுங்கள். எழுதுங்கள் அதைவிட்டு விட்டு ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை, அவர் குணமாகி வந்துவிடுவார் யாரும் கவலை படத்தேவையில்லை, அவரை நான் பார்த்தேன் பேசினேன், இப்படி அறிக்கைகள் பறக்கின்றது ஒரு புறம், மறுபுறம் கோவில் தோறும் சிறப்பு பூஜைகள் இப்படி போகிறது.
ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரை அப்போலோ மருத்துவ மனையிலோ, அமெரிக்காவிலோ கொண்டு போயி பார்ப்பார்கள். அவரிடம் வருமானத்த்திற்கு அதிகமான அளவில் பணமும், சொத்துக்களும் குவிந்து கிடக்கின்றன. உங்கள் தெருவில் உள்ள குப்பனுக்கும், சுப்பனுக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களை பார்க்க முறையான வசதியோடு கூடிய ஒரு அரசு மருத்துவமனை கூட ஒழுங்கா இல்லை.
இதை பற்றி எழுதுங்கள், கவலை படுங்கள். எங்கு பார்த்தாலும் ரஜினி, ரஜினி, என்று ஒரு வேற்று மாயையை தோற்று விக்காதீர்கள். உங்கள் மனோநிலை என்று மாறும். நீங்களாக உங்களை மாற்றிக் கொள்ளாதவரை மாறுதல்கள் ஒன்றும் தானாக வராது. இந்த ஊடகங்களுக்கு எழுதவும், பேசவும் மக்கள் பிரச்சனைகளே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது போல் நடந்து கொள்வது மிகவும் வேதனையான விஷயம்.
இந்த பத்திரிக்கைகள்தான் ஆதிக்க சக்திகளின் கைகளில் போகி விட்டது என்று பார்த்தால். மீதம் இருக்கும் இந்த வலைத்தலங்கலாவது உருப்படியாக மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசும் என்றால்? இவர்களும் சினிமாவிற்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நல்ல பதிவர்கள் கூட சினிமா செய்திகளை போட்டால்தான் நம் இணைய தளத்தையும், நாம் போடும் போஸ்ட்களையும் முன்னுரிமை தருவார்கள் என்ற மனநிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும், கவலையும் ஏற்படுகிறது.

                                           !எந்திர! தனமின்றி இயல்பாய் சிந்திப்போம்.


நபி(ஸல்):


ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் ஜனங்களுக்கு மத்தியில் இருந்தார்கள். (அப்போது) ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “ஈமான்” என்றால் என்ன? எனக்கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வையும் அவனது (மலக்குகளை) அமரர்களையும், அவனது வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனது தூதர்களையும் நம்பிக்கை கொள்வதும், இறுதியாக எழுப்பப்படுவோம் என்பதை நீ நம்பிக்கை கொள்வதுமாகும்” என்றனர்.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! “இஸ்லாம்” என்றால் என்ன? என (வந்திருந்தவர்) கேட்டார். (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அல்லாஹ்வை நீ வணங்குவதும், அவனுக்கு நீ எதையும் கூட்டாக்காமல் இருப்பதும், விதியாக்கப்பட்ட தொழுகைகளை நீ நிறைவேற்றுவதும், விதியாக்கப்பட்ட ஜகாத்தை நீ நிறைவேற்றி வருவதும், ரமளானில் நீ நோன்பு நோற்பதுமாகும்” என்றனர்.



“அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இஹ்ஸான் என்றால் என்ன என (வந்திருப்பவர்) கேட்டார். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) நிச்சயமாக நீர் அல்லாஹ்வைக் காண்பது போன்றே வணங்குவதாகும். நிச்சயமாக நீர் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையாயினும், அல்லாஹ் நிச்சயமாக உம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்” என்றனர்.

(வந்திருந்தவர்) “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (“கியாமத்” எனப்படும்) இறுதி நாள் எப்போது”? எனக் கேட்டனர். (அதற்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள்) “கேட்டவரை விட கேட்கப்படுபவர் இது பற்றி மிக அறிந்தவரல்லர். ஆயினும் அதன் அடையாளங்களைப் பற்றி உமக்கு அடுத்து அறிவிக்கிறேன் (எனக்கூறி) அடிமைப்பெண் தனது எஜமானனைப்பெற்று விடுவாளாயின் அது அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடையில்லாதவர்களும் காலில் செருப்பணியாதவர்களும் மக்களுக்குத் தலைவர்களாக ஆகிவிடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளதாகும். ஆடு மேய்த்துத் திரிபவர்கள் மிக உயர்ந்த நீண்ட கட்டிடங்களுக்கு உரிமையாளர்களாகி விடுவார்களாயின் அது(வும்) அந்நாளின் அடையாளங்களில் உள்ளாதாகும். (இன்னும்) ஐந்து விஷயங்கள் - அவைகளை அல்லாஹ்வையன்றி வேறு யாரும் அறியமாட்டார்கள்” (எனக் கூறிவிட்டு) பிறகு

“நிச்சயமாக அல்லாஹ்விடமே இறுதிநாள் பற்றிய அறிவு உண்டு. அவனே மழையை இறக்கி வைக்கிறான். மேலும் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அவனே அறிகிறான். எந்த ஆத்மாவும் நாளை எதைச் செய்யும் என அதற்கு தெரியாது. எந்த ஆத்மாவும் பூமியில் இறப்பெய்தும் என்பதையும் அது அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் (செய்திகளை) அறிவிப்பவனாகவும் இருக்கிறான்” அல்குர்ஆன் : 31: 34 என்ற வசனத்தை ஒதிக்காட்டினார்கள்.

அதன் பிறகு (வந்திருந்த அந்த ) மனிதர் திரும்பச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் “அந்த மனிதரை மீண்டும் என்னிடம் அழைத்து வாருங்கள்” என்றனர். அவரைத் திரும்ப அழைத்துவரச் சென்றவர்கள் யாரையும் (அம்மனிதரைக்) காணவில்லை என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவர்கள்தான் (வந்து சென்றவர்தான்) ஜிப்ரீல், மனிதர்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக வந்தனர்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு 

தலைப்பற்றது...


26.12.2010 இறைவன் குறித்த நாள் போலும்,
அறிந்தே யிருக்கமாட்டார்கள் மரணத்தை சுவைப்போமென்று,

ஆழிப்பேரலை ஏற்படுத்திய அதே தினத்தில்,
கடல் அன்னை காவு கொண்டாள்...
எங்களின் பதினைந்து விலைமதிக்க முடியா உயிர்களை!!!

மாபெரும் மரண போராட்டம் அது!

இதோ! மரண படுகுழி வந்துவிட்டது என்று -படகு அவர்களை கவிழ்த்திய போது ...
கலங்கிப்போயிருப்பார்கள்...
எங்களால் அதை உணர முடிகிறது...
உதவிக்கு சென்றவர்கள் - உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது.
உயிருக்கான போராட்ட வரலாறை
பின்புதான் எங்களால் தொகுக்க முடிந்தது...
ஆறு மாத குழந்தை முதல்
அறுபது வயது குமரிகள் நிறைந்த
கடல் போர் அது...

எமது கன்னிகள் அதில் வீரமுடன் போராடியிருக்கிறார்கள்...
பிழைத்தவர்கள் அதற்கு சாட்சி...
கணவனோடு சென்ற மனைவிகளை கணவன் காப்பாற்றியதும்,
குழந்தைகளுக்காக குமரிகளும் குடும்பத்தவர்களும்...
கடலிலே களமாடியதும்...
வார்த்தைகள் விம்மி அழுகின்றன...
ஆனாலும் அந்த வீர வரலாற்றை வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை...
சுயநலம் சில உயிர்களை படுகொலை செய்திருக்கிறது...
மன்னிக்கவே முடியாதது அது...

உயிர் பிழைத்தவர்கள்...
தங்களுக்காக உயிரை பிச்சையாகயிட்டவர்களை மறக்க முடியாது...
மரணம் வரை அதன் ஞாபக அலைகள் வீசிக்கொண்டேயிருக்கும்...

எமது கன்னிகள் போராடியிருக்கிறார்கள்...
ஒன்று ... இரண்டு... மூன்று... என்று உயிர்களுக்கு மறு
வாழ்க்கைக் கொடுத்துவிட்டு...
தாங்கள் பிழைக்க எத்தனித்த பொழுது...
கடல் காமுகன் எங்கள் கன்னிகளின் ஆடைகளை
பறித்து கொண்டது பரிதாபம்...

படகிலிருந்தவர்கள் கை நீட்டி அழைத்த போது..எமது கன்னிகள்!
கீழாடைகள் அறுபட்டதை அறிந்து...
மரணத்தை விட மானம் பெரிதென்று மாண்டு போனார்கள் - எங்களது வீராங்கனைகள் சிலர்...

நேரில் பார்த்தவர்கள்... பிரமித்துப் போயிருப்பார்கள்
இன்றும் பிழைத்தவர்கள் மெளனமாய்...
அவர்களின் மெளனம்,வார்த்தைகள் இல்லாத தியாக வர்ணிப்பு...
எங்களால் அந்த உணர்ச்சிகளை அவர்களை காணும் போது -
மொழிப்பெயர்க்க முடிந்தது...

தண்ணீரில் இறப்பவர்கள் 'ஷஹீதுகள்' தான்...
அதற்கு சான்றுகள் இருக்கின்றன...
எமது சகோதரிகள் அதற்கு சாட்சிகள்...

ஊரே திரண்டிருந்தது...
கை சேதம்!
எங்களால் ஊர்வலமாய் மட்டுமே போகமுடிந்தது...
அவர்களுக்காக!
மரணப்படுகுழிகளை அறைகளாக் அலங்கரித்துக்
கொடுக்க மட்டுமே முடிந்தது...
முடிந்தது... இறைவா! அனைத்தும் முடிந்தது...
கண்ணீருடன் பிரார்த்திக்கின்றோம்...
கதறி மன்றாடுகின்றோம்...
அவர்களுக்காக சுவர்க்கத்தை கூலியாக கொடுப்பாயாக...
வக்கற்ற விதிகளோடு...
நான்

                                                                                             நன்றி-ஹாலீத்(ppm)