இது எங்கள் ஊரின் பாராம்பரியம்,ரமலான் பிரையை கண்டவுடன் எங்கள் ஊரில் இருக்க கூடிய 2500 கு மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளில் சகோதரத்துவத்தை பேனுவதற்காக இவ்வாறு வருடம் வருடம் செய்வதுண்டு.
ரமலான் மாதத்திற்கு முன்பாக யாரிடமாவது சண்டைகள் செய்திருந்தாலும் இந்த நாளில் அவர்களின் வீட்டிற்கு சென்று ஸலாம் கூறி மனகசப்பை தூக்கி எறிந்து நீங்களும் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறி வருவார்கள்.
அவர்களும் மகிழ்ச்சியிடன் அவர்கள் வீட்டிற்கும் சென்று சகோதரத்துவத்தை வலுபடுத்துவார்கள்.
மஹரிஃபிலிருந்து இஷா வரை எங்கள் ஊர் வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரம் போன்று காட்சி அளிக்கும்.
இதில் சிறுவர்கள் எந்த நாளிலும் கொண்டாடிடாத மகிழ்ச்சியை இந்த நாளில் தான் அவர்கள் நண்பர்களிடன் கூடி வீடு வீடாக ஸலாம் கூறி மிட்டாய்,வாங்கி சாப்பிடுவார்கள்.
இந்த நாள் வரும்போது யெல்லாம் என்னை 17 வருடங்களுக்கு பின்னால் இழுத்து செல்கிறது.
- சாகுல் ஷா
- சாகுல் ஷா
No comments:
Post a Comment