இராமநாதபுரம் நகருக்கு தென்கிழக்கே இருபது கி.மீ தொலைவில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ளது இந்த கிராமம். இப்னு பதுதா , மார்க்கோ போலோ போன்றவர்கள் வந்திறங்கிய வரலாற்று சிறப்பு மிக்க கிழக்குக் கடற்கரை துறைமுக நகரங்களில் ஒன்றாக திகழ்ந்துள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் பராக்கிரம பட்டினம்[6] என்றும், பன்னிரண்டாம் நூற்றாண்டில் பவித்திர மாணிக்க பட்டினம் என்றும், பதினான்காம் நூற்றாண்டில் சீனர்களால் டாய்-இ-ச்சிஹ்-லச் (தா-பத்தன்) என்றும்[7] இன்று பெரியபட்டினம் என்றும் அழைக்கப்படுகிறது. பல்லாயிரம் முஸ்லிம்களை உள்ளடக்கியது. இங்கு கடல்தொழில் முக்கியத்தொழிலாக இருக்கிறது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,478 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 4,793 ஆண்கள், 4,685 பெண்கள் ஆவார்கள். பெரியபட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.44% ஆகும்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9,478 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[8] இவர்களில் 4,793 ஆண்கள், 4,685 பெண்கள் ஆவார்கள். பெரியபட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 77.44% ஆகும்.
தகவல்
ஊர் பெயர் : பெரியபட்டினம்
மாவட்டம் : இராமநாதபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா
மொழி : தமிழ்
வெப்ப நிலை : 30 டிகிரி செல்சியஸ் (வெயில் காலங்களில் )
25 டிகிரி செல்சியஸ் (மலை காலங்களில் )
குறியீடுகள் :
அஞ்சல் எண் :623523
போன் நம்பர் :04567-
வாகனம் :TN - 65
No comments:
Post a Comment