Thursday, 30 June 2011

சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு :


               விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

உலமாக்களுக்கு அடையாள அட்டை:


கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் ஆட்சியர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது.


மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை ! :


          மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தாவில் 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் சாவு:



கொல்கத்தா: கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளதாக கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனை தெரிவித்துள்ளது.கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளன. இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Tuesday, 28 June 2011

லண்டனில் சுற்றித் திரியும் அதிசய பொருட்கள் :

                                                             


        கிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன. லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.



Monday, 27 June 2011

உடலில் 150 குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய மனிதன்:

          
         இங்கிலாந்தின் டரம் கவுன்டியில் உள்ள பேர்வேஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோ கிளார்க்(33). இவரது முகம், கழுத்தில் அம்மை தழும்பு போல சில புள்ளிகள் இருக்கின்றன.



தேம்ஸ் நதியின் மேல் நடந்து சாகசம் புரிந்த மாயாஜால நிபுணர்:

பிரிட்டனை சேர்ந்த பிரபல மாயாஜால நிபுணர் ஸ்டீவ் பிரையானே தேம்ஸ் நிதியின் மீது நடந்து சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிறுபான்மை துறை அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்:

சிறுபான்மை துறை அமைச்சர்   முகம்மது ஜான் 

சென்னை : தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.


Sunday, 26 June 2011

அமெரிக்காவில் மைனாரிட்டியாகும் வெள்ளை இனத்தவர்கள் :

        
                  அமெரிக்காவில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர்.ஆனால் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெள்ளையின குழந்தைகளை விட கறுப்பின குழந்தைகள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

Saturday, 25 June 2011

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்



      பெரியப்பட்டிணத்தை சார்ந்த ஜெயந்திர என்ற சகோதரி  15-6-2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முசிஃபா ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.


உலகின் முதன் முறையாக 7 வயது சிறுமிக்கு மூன்று செயற்கை இதயங்கள்


உலக நாடுகளில் பெரும் மருத்துவ சாதனையை எட்டிய நோயாளியாக 7 வயது சிறுமி ஹன்னா அட்னன் உள்ளாள்.இவரது உயிரை காப்பாற்றுவதற்கு மூன்று முறை செயற்கை இதயங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஹன்னா எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்.

Friday, 24 June 2011

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பயப்படாது! அஹ்மது நிஜாத் :



        தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கு பயப்படவில்லை ஆனால் அப்படி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார் வியாழக்கிழமையன்று அரசு தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டது.நாங்கள் அணு குண்டு செய்ய வேண்டும் என்றால்  யாருக்கும் பயப்படத்தேவையில்லை

Thursday, 23 June 2011

இணையதளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி:


         சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.


தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சாவு:


    பள்ளிக்குச் செல்ல பெற்றோர் தடை விதித்ததைத் தொடர்ந்து மனம் உடைந்து தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள துலாச்சேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது மகள் சுப்புலட்சுமி, மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு முடித்திருந்தார்.

Saturday, 18 June 2011

நோயை வெளியே சொல்ல தயங்கும் இந்தியர்கள்:



      பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வந்துள்ள நீரிழிவு நோய் பாதிப்பை வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.இதனால் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Friday, 17 June 2011

2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை


      மத்திய அமெரிக்காவின் மாயா பிரிவினர் மக்கள் காலாண்டர் கணிப்புபடி இன்னும் 18 மாதத்தில் உலகம் அழியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த கணிப்பு குறித்த பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.


தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்


     முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. 


இளைஞர்களின் குடிப்பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்: ஆய்வில் தகவல்


      பெற்றோர் தினமும் குடிப்பதை பார்க்கும் குழந்தைகள் அவர்களும் இளம் வயதில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பிள்ளைகளை கவனிப்பதில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகுகிறார்கள்.

Thursday, 16 June 2011

பலஸ்தீன் விளைநிலங்களுக்குத் தீமூட்டும் இஸ்ரேலிய அராஜகம் :


          ரமல்லாவில் உள்ள இஸ்ரேலிய பிரிவினைச் சுவரை அடுத்திருக்கும் பலஸ்தீன் விவசாயிகளுக்குச் சொந்தமான விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை எரியூட்டியுள்ளமை அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tuesday, 14 June 2011

ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. மீது பிணையில்லா கைது வாரண்ட்! :

          மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது பிணையில்லா கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு முதலீடு சீரமைப்பு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் நான்கு பேர் மீது,

பேஸ்புக்கே வேண்டாம் என்று ஓடி ஒளியும் மக்கள்....



      அமெரிக்காவின் பேஸ்புக் இன்கார்ப்பரேஷன் நிறுவனம் கடந்த 2004ம் ஆண்டு  பேஸ்புக் சமூக இணையதள சேவையை தொடங்கியது.மின்னஞ்சல் கணக்கு போல யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.


Monday, 13 June 2011

உண்ணாவிரத புரட்சிகளும் சர்மிலா சானுவும் !

           ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை நிலை என்ன?


அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! 

நாளை மறுநாள் சந்திரகிரகணம்: தமிழகத்தில் வெறும் கண்ணால் காணலாம்:


நாளை மறுநாள் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை தமிழக மக்கள் வெறும் கண்ணால் காண முடியும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வருவது சந்திர கிரகணமாகும். பூமியின் நிழல் சந்திரனை விட்டு விலகும் வரை சந்திர கிரகணம் நீடித்திருக்கும்.

14 வயது முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த உ.பீ போலீசின் மிருகத்தனம்


லகிம்பூர் கேரி:உ.பி மாநிலத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் பதினான்கு வயதான முஸ்லிம் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த படுபாதக சம்பவத்தின் பின்னணியில் போலீசார் செயல்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

Tuesday, 7 June 2011

அக்கிரமிப்பு ராணுவ தாக்குதலில் பலஸ்தீன இளைஞன் படுகாயம்

    கடந்த செவ்வாய்க்கிழமை (07.06.2011) காஸா பிரதேச பெய்ட் ஹனூன் பகுதியில் இடம்பெற்ற அமைதிப் பேரணியை இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், பேரணியாளர் மீது சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததோடு,கையெறி குண்டுகளையும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசிக் கடும் தாக்குதல் மேற்கொண்டதில் சிறுவர்கள் உட்பட பலஸ்தீன் பொதுமக்களில் அனேகர் காயமடைந்தனர்

பிரபலமானது சுஷ்மா சுவராஜ்ஜின் இரவு நடனம் : டுவிட்டரில் புலம்பல்


பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏன் தொலைக்காட்சி சேனல்கள்  மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்றன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

அழுகுரல்..


பகையால் புகையும் தேசம்;
புதைந்த நேசங்களால்
கதறும் பாசம்;

Friday, 3 June 2011

எச்.ஐ.வி பாதிப்பு: இந்தியாவுக்கு 10-வது இடம்:

வளரும் தலைமுறையினரில் சுமார் 2 ஆயிரத்து 500 பேர் தினமும் எய்ட்ஸ் நோய்க்கு தாக்குதலுக்கு உள்ளாவதாக ஐ.நா சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Thursday, 2 June 2011

வெற்றி பெறுவதற்கு...

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.
 2.    ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.
3.   உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறை களில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.
4.  வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம்.  அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.
5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

ஊழலுக்கு எதிராக போராடும் பாபா ராம்தேவின் சொத்து மதிப்பு 1100 கோடி :

    
புதுடெல்லி:ஊழலுக்கு கறுப்பு பணம் பதுக்கலுக்கும் எதிராக உண்ணாவிரதப்போராட்டத்தம் நடத்த இருக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸின் யோகா குரு பாபா ராம்தேவின் சொத்து 1100 கோடி ஆகும்.
உத்தரகண்டில் உள்ள ஹரித்துவாரில் பதஞ்சலி யோகாபீட அறக்கட்டளையின் கீழ் ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உள்ளன.

Wednesday, 1 June 2011

செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை


         ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால் கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால்


வறுமையை நோக்கி உலகம் :


   லண்டன்:சர்வதேச அளவிலான உணவு நெருக்கடி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உள்நாட்டு போரை உருவாக்கும் என ஐ.நா கூற்றை நிரூபிக்கும் வகையிலான அறிக்கையை ஆக்ஸ்பாம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகம் நிலையான உணவு நெருக்கடியில் ஆழ்ந்துவிடும் என அவ்வறிக்கை கூறுகிறது. 98 நாடுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏழில் ஒரு நபர் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருவதாக அதிர்ச்சியான செய்தியை கூறுகிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை.
விலை உயர்வும், அதிகரிக்கும் மக்கள் தொகையும் (?) எதிர்காலத்தில் உலகை ஸ்திரத்தன்மையற்றதாக மாற்றும் என ஆக்ஸ்பாம் கூறுகிறது. 1990-ஆம் ஆண்டிற்கு பிறகு உணவு பொருட்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டு 120 முதல் 180 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வருமானத்தின் 80 சதவீதத்தை உணவுக்காக செலவிடும் உலகில் வாழ்வாதாரங்களுக்காக கஷ்டபட வேண்டிய சூழல் ஏற்படும். தற்போது நெருக்கடியை சந்திக்கும் உணவு பாதுகாப்பற்ற நாடுகளை குறித்தும் இவ்வறிக்கை குறிப்பிடுகிறது. இதில் இந்தியாவும் உட்படும். குவாட்டிமாலா, அஸர்பைஜான், கிழக்கு ஆப்பிரிக்கா ஆகியனவும் இதில் அடங்கும்.

தண்ணீர்: ஆச்சரியமான தகவல்கள்:

  
ஐ.நா. அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஐந்து வயதிற்குட்பட்ட ஒரு குழந்தைதண்ணீர் சம்பந்தமான நோயினால் இறந்து போகின்றது. கெட்டுபோன மற்றும் மாச டைந்த தண்ணீரை பயன்படுத்துவதால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்ற அனைத்து வகையான காரணங்களாலும் ஏற்படும் உயிரிழப்புகளை விட அதிகம்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்தொழிற்சாலை கழிவுகள் மற்றும் வேளாண்மை கழிவுகளால் நீர் ஆதாரங்களை நாம் அன்றாடம் மாசுபடுத்தி வருகிறோம். தினமும் கிட்டத்தட்ட 20 லட்சம் தொன் கழிவுகள் ஆறுகள் மற்றும் கடல் களில் கலக்கப்படுகின்றன.
இந்த கழிவுகளே சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கும்பல்வேறு நோய்கள் பரவுவ தற்கும் ஆதாரமாக விளங்குகின்றன. இதனால் பெரிதும் பாதிக்கப் படுபவர்கள் ஏழை மக்களே ஆவர். குடிநீர் தட்டுப்பாடு,சுற்றுச்சூழல் கேடு மற்றும் சுகாதார மற்ற கழிப்பிட வசதிகள் போன்ற பிரச்னைகள் ஏழைகளையே பெருமளவில் பாதிக்கின்றன.
ஆண்டொன்றுக்கு 18 லட்சம் குழந்தைகள் பாதுகாப்பற்ற குடிநீரைப் பயன் படுத்துவதால் உண்டாகும் நோய்களால் மட்டும் இறக்க நேரிடுகிறது.