Tuesday, 7 June 2011

பிரபலமானது சுஷ்மா சுவராஜ்ஜின் இரவு நடனம் : டுவிட்டரில் புலம்பல்


பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவவராஜ், பொதுமக்கள் முன்னிலையில் நள்ளிரவில் ஆடிய நடனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏன் தொலைக்காட்சி சேனல்கள்  மீண்டும் மீண்டும் எனது நடனத்தை முன்னிலைப்படுத்தி காண்பிக்கின்றன என தனக்கு புரியவே இல்லை என சுஷ்மா சுவராஜ் டுவிட்டர் மூலம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.


யோகா குரு பாபா ராம்தேவ் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராஜ்காட்டில் ஒன்றிணைந்த பாஜகவினர் நள்ளிரவு முழுவதும் தர்ணா நடத்தினர். மறுநாள் காலை அவர்கள் ஜனாதிபதி பிரதீபா பட்டேலை சந்திப்பதற்கு திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், தர்ணாவின் போது நிகழ்ந்த பஜன் ஒன்றில் சுஷ்மா சுவராஜ் நடனமாடினார். அதனை படம்பிடித்த ஊடகங்கள், இது தான் பாஜகவினர் நடத்தும் சத்திய கிரஹ போராட்டம் என செய்தி வெளியிட்டன. இதனை கண்டித்து டுவிட்டரில் கருத்து வெளியிட்ட சுஷ்மா ஸ்வராஜ், இது தான் எங்களது கலாச்சாரம். எமது எல்லா சத்தியகிரஹ போராட்டத்திலும் இப்படி ஆடிப்பாடுவோம், இதை தவறான ரீதியில் அர்த்தப்படுத்த வேண்டாம் என டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.வீடியோ கட்சியை பார்க்க 


No comments:

Post a Comment