Tuesday, 23 August 2011

ஆடம்பரத்தில் பரக்கத் இருப்பதில்லை :


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..,
 இனிய ரமலானும் அது தரும் சின்னஞ்சிறு மகிழ்ச்சிகளும் கடந்த காலங்களுடன்முடிந்துவிட்டன பள்ளிவாசல் நோன்புக்கஞ்சியும், தேங்காய் துவையலும்கொடுத்த சுவைகள் நம் சமூகத்தில் இருந்து மறைந்துவிட்டது, எல்லோரும்கூடி அமர்ந்து பகிற்ந்துண்ட நிலாக்காலங்களை நம் சமூகம் மறந்துவிட்டது.

Sunday, 21 August 2011

பெரியபட்டினத்தில் சூடு பிடிக்கும் உள்ளாட்சி தேர்தல்:-


         நடை பெற விருக்கும் ஊராட்சி தேர்தலை ஒட்டி பெரியபட்டிணத்தில் வேட்பாளராக நிற்க விருக்கும் தலைவர்கள் போது மக்களின் குறை கேட்டு 2 மணி நேரத்தில் சரி செய்வதோடு .பெரியபட்டிணத்தில் கடந்த 5 வருட காலமாக குண்டும்  குழியுமாக இருந்த சாலைகள் சீரமைக்க பட்டு வருகின்றன.

கடலில் அட்டை பிடித்ததாக ஆட்டோ டிரைவர் கைது .போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் :


     கடல் தொழில் செய்பவர்கள் ஆட்டோ ஓட்டுனர்கள் என்று மொத்தம் 18 பேர் மீது கடல் அட்டை பிடித்ததாக போலீசார்  பொய்வழக்கு போட்டுள்ளனர் இத்தகைய போலிசின் கோமாளித்தனத்தை கண்டித்து பெரியபட்டிணத்தில் உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக போலிசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டம் நடந்ததது .

Saturday, 20 August 2011

பெரியபட்டிணத்தில் போலீசாரால் போடப்பட்ட பொய் வழக்கு:



    கடல் பகுதியில்  வசிக்க கூடிய அநேகம் பேர் இந்திய அரசாங்கத்தால் தடை செய்ய பட்டுள்ள அறிய வகை உயிரனமாக கருதபடகூடிய  அட்டையை  நம்பியுள்ளார்கள்.இந்த அட்டையை நம்பி வாழும் மக்கள் இன்று தங்கள்  அன்றாடம் வாழ்க்கையை நடத்துவது என்பது அரிதான ஒன்றாக உள்ளது என்கின்றார்கள்.

பெரியபட்டிணத்தில் குர்ஆன் மற்றும் கிராத் ஓதும் போட்டி நடைபெற உள்ளது :



     பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் 21.08.2011 இன்று   காலை 10  மணியளவில் இஸ்லாமிய இளைஞர்கல் சபை  சார்பாக மாணவர்களுக்கு குர்ஆன் மற்றும் கிராத் ஓதும் போட்டி நடைபெற உள்ளது அதில் சிறப்பாக ஓதும் மானவர்களுக்கு முதல் பரிசாக ருபாய் 2000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 1000 ரூபாயும் கொடுக்க உள்ளார்கள்.


Sunday, 31 July 2011

நோன்பாளிகளே உங்களைத்தான்!

                                            

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

Ø  1, 2, 3 மணிக்கு ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன்சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது.

Thursday, 28 July 2011

PFI-ன் சார்பாக பெரியபட்டிணத்தில் மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவு திறன் போட்டி :


        25/07/2011 அன்று  பெரியபட்டினம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் சார்பாக மாணவர்களுக்கான அறிவு திறன் போட்டி நடத்தப்பட்டது .அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியின் இமாம் மௌலவி முஹம்மத் இஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார்.

Sunday, 24 July 2011

இந்திய அரசாங்கம் இராணுவத்திற்கு பயிற்றுவிப்பது என்ன ?கேள்வி குறியாகும் கஷ்மீர் பெண்களின் நிலை ?:


      இந்தியாவை காப்பதற்காக உருவாக்கப்படும் இந்திய இராணுவத்திற்கு அரசாங்கம் பயிற்றுவிப்பது என்ன வென்பது கஷ்மீரில் நடக்கும் அவலத்தை வைத்து பார்க்கும் போது நம் மனத்திர்ற்குள் பெரும் ஐயம் ஏற்படுகிறது .இந்தியாவை காப்பதற்காக இந்திய எல்லையான கஷ்மீரில்


Saturday, 23 July 2011

காவி தீவிரவாதிகளின் மோக சூழ்ச்சி ,பெண்களே உஸார்:



       கர்நாடக மாநிலம் உடுப்பியில் சரலெபெட்டு சிவபாடி உமாமஹேஸ்வரி கோவிலருகே வசித்து வரும் முஸ்லிம் பெண் புஷ்ரா. கடந்த 8 வருடங்களுக்கு முன்பு தனது கணவர் ஜாபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு இக்பால் (4),இர்பான் (3), பாத்திமா யாஸ்மீன் (2) மற்றும் ஜலாலுதீன் 



தற்பெருமை கொள்ளாதீர்கள் :


     எல்லாம் வல்ல இறைவன் வானத்தையும், பூமியையும் ,மனிதனையும் படைத்த இறைவன் சில விசயங்களை  மனிதன் கண்டிப்பாக தடை செய்யணும். அது அறவே தவிர்க்க வேண்டும் என்று தடுக்கிறான் .அதில் மிக முக்கியமான  ஒன்று பெருமை .ஒரு மனிதன் எந்த காரியத்தை செய்தாலும்


Tuesday, 19 July 2011

பெரியபட்டிணத்தில் SDPI மற்றும் PFI -ன் வளர்ச்சியை தடுக்க சதி :

வெறுமென நிற்கும் கொடிக்கம்பங்கள் 

     பெரியபட்டிணத்தில் என்ன என்ன கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இயங்கிவருகிறது என்பதற்கு உதாரணமாக பெரியபட்டிணம் பேருந்துநிலையத்தில் கட்சிகள் ,மற்றும் இயக்கங்களின் வர்ணம் பொறித்த  கொடிகள் நடப்பட்டிருக்கும் .நேற்று இரவு (18.07.2011) சில மர்ம நபர்கள்  

Monday, 18 July 2011

இந்தியாவில் பிறந்ததது குற்றமா? ,அல்லது முஸ்லிம்களாக பிறந்ததது குற்றமா?


        இந்தியா சுதந்திரத்திற்காக எங்கள் முன்னோர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சுதந்த்திரத்தை பெறறுதந்தார்கள் .அனால் இன்று முஸ்லிம்களாகிய எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டு கொண்டு  இருக்கிறது.
181 மில்லியன் மக்கள் தொகை உள்ள இந்த இந்தியாவில் குண்டு வெடித்தால் முஸ்லிம்கள் என்ற நிலையை உருவாக்கியது ஏன்? நாங்கள் சுதந்திரத்தை பெற்று தந்ததர்க்காகவா .


Sunday, 17 July 2011

பெரியபட்டிணத்தில் கேம்பஸ் ஃப்ரன்ட்டின் தீவிர உறுப்பினர் சேர்க்கை கூட்டம் :


    தமிழ்நாடு  முழுவதும் மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரன்ட்டின் சார்பில் தீவிர உறுப்பினர் சேர்கை நடை பெற்று கொண்டு இருக்கிறது அதன் ஒரு பகுதியாக பெரியபட்டிணம் சமுதயகூடத்தில் (17.07.2011) நடந்த கூட்டத்தில் பெரியபட்டினத்தை சேர்ந்த பசிர் அவர்கள் தலைமை ஏற்று  சிறப்பு உரை வழங்கினார். அவர் தனது உரையில்,



Thursday, 14 July 2011

திருமண அழைப்பிதழ் :

        
        பெரியபட்டிணம் S.K.S ஜக்கரியா அவர்களின் மகன் இப்ரான் கான் அவர்களுக்கு இன்ஷா அல்லாஹ் நாளை (15.07.2011)  மாலை 5 மணியளவில் பெரியபட்டிணம் அல்-மஸ்ஜிதுல் ஃபாலக் பள்ளியில் நிக்காஹ் நடைபெற உள்ளது அவருடைய மணவாழ்க்கை சிறப்பாக அமைய அனைவரும் துவா செய்யுமாறு கேட்டு கொள்ளபடுகிறது 



Wednesday, 13 July 2011

மும்பையில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு-20 பேர் பலியானதாக தகவல்


    மும்பை: மும்பையில் இன்று மாலை 3 இடங்களில் ஒரே சமயத்தில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. மும்பையின் தாதர், ஓபரா ஹவுஸ் மற்றும் ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் இன்று மாலையில் குண்டுகள் வெடித்தன.



Thursday, 7 July 2011

தயாநிதி மாறன்- ராஜினாமா


மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை இன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் அளித்தார்.முன்னர் , பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதிமாறன் பங்கேற்றார்.  

நியூசிலாந்தில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது


நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ள கெர்மடெக் தீவு பகுதியில் இன்று காலை 7 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.அந்த தீவு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 என்ற அளவுக்கு பதிவாகி இருந்தது.



Wednesday, 6 July 2011

மீண்டும் வெடித்தது தெலுங்கான ! உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே போலீஸ் குவிப்பு :


  நேற்று முதல் 48 மணி நேர முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.இதனால் ஐதராபாத், மெதக் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பேரூந்து மற்றும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் ஒரேநாளில் ரூ. 10 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படடுள்ளது.

செங்கடலில் அகதிகள் படகு மூழ்கி செளதிக்கு சென்ற 197 பேர் பலி


   சூடானிலிருந்து 200 அகதிகளை ஏற்றிக் கொண்டு செளதி அரேபியாவுக்குச் சென்ற படகு தீப்பிடித்து எரிந்து, கடலில் மூழ்கியதில் 197 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கடும் கலவரம் நடந்து வரும் சூடான், சோமாலியா, எரித்ரியா, எதியோப்பா ஆகிய நாடுகளில்


Tuesday, 5 July 2011

பசியின் கோரபிடியில் வாடும் ஆப்பிரிக்க மக்கள்


  உலக அளவில் மழை உரிய நேரத்தில் பெய்யாததாலும், உணவுப்பொருள் விலை அதிகரிப்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் பஞ்சத்தில் தவிக்கின்றன.எத்தியோப்பியா, கென்யா மற்றும் சோமாலியா பகுதிகளில் உள்ள 120 லட்சம் மக்கள் பட்டினியில் உயிருக்கு போராடுகிறார்கள். ஆப்பிரிக்க பகுதிகள் பஞ்சத்தில் தவிக்காமல் இருக்க பெருமளவு உணவு, உதவி அளிக்க வேண்டும் என ஆக்ஸ் சர்வதேச தொண்டு நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


2015க்குள் வறுமையை ஒழிப்பேன் –மக்களை ஏமாற்றும் வாக்குறுதி


    தமிழகத்தில் 2015ம் ஆண்டுக்குள் வறுமை, வேலையில்லா திண்டாட்டம் அறவே ஒழிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இதை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசியதாவது:

அமெரிக்கா இனி வல்லரசு இல்லை: அமெரிக்கா மக்களே சொல்லும் அவலம்


   லகின் ஒரே வல்லரசாக மிஞ்சி இருக்கும் அமெரிக்கா இனி வல்லரசு இல்லை என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்கர்களே இத்தகைய எண்ணம் கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வார பத்திரிகையான டைம் இதழ் ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.



Monday, 4 July 2011

ஒபாமா சுட்டுக் கொலை: ஆதரவாளர்கள் அதிர்ச்சி


     அமெரிக்கா அதிபர் ஒபாமா சுடப்பட்டதாக பொக்ஸ் தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையதளத்தில் தகவல் பரவியதால் அதை படித்த அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.அமெரி்க்காவின் முன்னணி தொலைக்காட்சியான "பொக்ஸ் நியூஸ்" பயன்படுத்தி வரும் டுவிட்டர் இணையதளப் பக்கத்தில்

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியுடன் ஓடிய தமிழர்:


    லண்டன்: இலங்கையின் தமிழ் இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்தும் வகையிலும், அதைக் கண்டிக்கும் வகையிலும், உலக நாடுகள் இலங்கையின் இனப்படுகொலை குறித்து நடவடிக்கை எடுக்கும் வகையிலும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தமிழ் ஈழக் கொடியை அசைத்தபடி ஒரு தமிழர் ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

UAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடு :


   இந்தியாவிலிருந்து UAE நாட்டிற்கு பார்வையாளர் (VISITOR) விசாவில் வருபவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விசா அனுப்பும் நபர் துபாயிலுள்ள இந்திய தூதரகத்தில் படிவம் SD-V(5) - SPONSOR'S DECLARATION FORM ஐ பூர்த்தி செய்து, விசா ஏற்பாடு செய்தவருடைய (Sponsor) கடவுச்சீட்டு (PASSPORT) மற்றும் சம்பள விபரம் (PAY SLIP) நகலையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

Sunday, 3 July 2011

முஸ்லிம்களை கொள்வதற்காக வைக்கப்பட்ட குண்டு :மொசாத ?,CIA-வா?


      தாய்லாந்தின் அதிக மக்கள் நடமாட்டமுள்ள நகரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நேற்று காலை நடைபெற்றது.அங்கு வாழுகின்ற 4500 க்கும் மேற்பட்ட முஸ்லீம்கலை நோக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது 

Saturday, 2 July 2011

சவுதி அரேபியா தீ விபத்தில் 6 இந்தியர்கள் பலி:


            ரியாத், ஜூலை 2 : சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு இந்தியர்கள் உடல் கருகி பலியாகினர்.
ரியாத்தில் உள்ள அல் பத்தா என்ற இடத்தில் ஒரு அடுக்கு மாடி கட்டடத்தில் ஏராளமான இந்தியர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் யு.எஸ். நடத்திய உலகளாவிய தாக்குதல்களில் 2.25 லட்சம் அப்பாவிகள் பலி



    2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரில் ஜார்ஜ் புஸ்சால் நடத்தப்பட்ட இரட்டை கோபுரம் இடிப்பு நாடகத்தை தொடர்ந்து  உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ தாக்குதலை நிறுத்தாவிட்டால் ஐரோப்பாவை தகர்ப்போம்: கடாபி


     லிபியாவில் வான்வழித் தாக்குதலை நிறுத்தா விட்டால் ஐரோப்பாவை தாக்குவோம் என லிபிய அதிபர் கடாபி எச்சரித்து உள்ளார். லிபியாவில் பொது மக்களை பாதுகாக்க போகிறோம் என்று கூறிக்கொண்டு நேட்டோ படைகள் முகாமிட்டு உள்ளன. இந்த பன்னாட்டுப் படையில் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா 

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் டாடாவின் நானோ கார் பரிசு :



ஜோத்பூர் : குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்க குடும்பக் கட்டுப்பாடு செய்ய முன்வருபவர்களுக்கு ராஜஸ்தான் அரசாங்கம் தொலைக்காட்சி, மைக்ரோ ஓவன், நானோ கார் என பல்வகை பரிசுகளை அளிக்கவுள்ளது.  ராஜஸ்தானில் உள்ள ஜுஹுஞ்ஹுனு மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி ப்ரதாப் சிங் தத்தர் இது குறித்து கூறும் போது

Friday, 1 July 2011

பெரியபட்டிணத்தில் கால்பந்து ஆட்டத்தால் தொடரும் விபரீதம்:


         பெரியபட்டினம் விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தினமும் விளையாடுவது வழக்கம் .அந்த விளையாட்டு அவர்களின் மத்தியில் பிளவை  ஏற்படுத்தும் வண்ணமாக அமைகிறது .நேற்று (30.05.2011) விளையாடி கொண்டு இருக்கும் போது 

"'சர்வதேச சமூகத்தின் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் இஸ்ரேலும் அமெரிக்காவுமே!" :


        சர்வதேச சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஆணிவேராய் இருப்பவை அமெரிக்காவும் இஸ்ரேலுமே" என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஹ்மதி நிஜாத் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்."அமெரிக்காவினதும் அதன் துஷ்ட சகாவான ஸியோனிஸ இஸ்ரேலினதும் எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகவே இன்று



Thursday, 30 June 2011

சிறுகோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உண்டாகும் நாடுகளின் பட்டியல் வெளியீடு :


               விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதுண்டால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.பிரித்தானியாவின் சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்களே இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

உலமாக்களுக்கு அடையாள அட்டை:


கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி வழங்கினார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் உள்ள குறைகேட்பு கூட்ட அரங்கில் ஆட்சியர் அமுதவல்லி தலைமையில் நடைபெற்றது.


மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை ! :


          மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொல்கத்தாவில் 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் சாவு:



கொல்கத்தா: கடந்த 36 மணி நேரத்தில் 17 குழந்தைகள் இறந்துள்ளதாக கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனை தெரிவித்துள்ளது.கொல்கத்தாவில் உள்ள பிசி ராய் மருத்துவமனையில் கடந்த 36 மணி நேரத்தில் அடுத்தடுத்து 17 குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளன. இந்த தகவலை மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

Tuesday, 28 June 2011

லண்டனில் சுற்றித் திரியும் அதிசய பொருட்கள் :

                                                             


        கிரகத்தில் இருந்து பறந்து வரும் வினோத பொருட்கள் அடிக்கடி ஆச்சரியத்தை அளிப்பதுடன் பெரும் விவாதத்திற்கும் ஆளாகி வருகின்றன. லண்டன் பி.பி.சி கட்டத்திற்கு மேல் யுஎப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படாத வினோத பொருள் பறந்தன.



Monday, 27 June 2011

உடலில் 150 குண்டுகள் புதைந்துள்ள நிலையில் வாழும் அதிசய மனிதன்:

          
         இங்கிலாந்தின் டரம் கவுன்டியில் உள்ள பேர்வேஸ் பகுதியை சேர்ந்தவர் ஜோ கிளார்க்(33). இவரது முகம், கழுத்தில் அம்மை தழும்பு போல சில புள்ளிகள் இருக்கின்றன.



தேம்ஸ் நதியின் மேல் நடந்து சாகசம் புரிந்த மாயாஜால நிபுணர்:

பிரிட்டனை சேர்ந்த பிரபல மாயாஜால நிபுணர் ஸ்டீவ் பிரையானே தேம்ஸ் நிதியின் மீது நடந்து சாகசம் செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சிறுபான்மை துறை அமைச்சராக முகம்மது ஜான் நியமனம்:

சிறுபான்மை துறை அமைச்சர்   முகம்மது ஜான் 

சென்னை : தமிழக அமைச்சரவையில் இன்று சிறிய அளவிலான மாற்ற் மேற்கொள்ளபப்ட்டது. புதிய அமைச்சராக ராணிப்பேட்டை எம்.எல்.ஏ. முகம்மது ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பதவியேற்கிறார்.


Sunday, 26 June 2011

அமெரிக்காவில் மைனாரிட்டியாகும் வெள்ளை இனத்தவர்கள் :

        
                  அமெரிக்காவில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் சிறுபான்மை இனமாக இருந்து வருகின்றனர்.ஆனால் தற்போது எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெள்ளையின குழந்தைகளை விட கறுப்பின குழந்தைகள் அதிகளவில் இருப்பது தெரியவந்துள்ளது.

Saturday, 25 June 2011

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்



      பெரியப்பட்டிணத்தை சார்ந்த ஜெயந்திர என்ற சகோதரி  15-6-2011 அன்று இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை முசிஃபா ஃபாத்திமா என மாற்றிக் கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.


உலகின் முதன் முறையாக 7 வயது சிறுமிக்கு மூன்று செயற்கை இதயங்கள்


உலக நாடுகளில் பெரும் மருத்துவ சாதனையை எட்டிய நோயாளியாக 7 வயது சிறுமி ஹன்னா அட்னன் உள்ளாள்.இவரது உயிரை காப்பாற்றுவதற்கு மூன்று முறை செயற்கை இதயங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஹன்னா எடின்பர்க் பகுதியைச் சேர்ந்தவர்.

Friday, 24 June 2011

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க பயப்படாது! அஹ்மது நிஜாத் :



        தெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கு பயப்படவில்லை ஆனால் அப்படி செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை என்று ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறியுள்ளார் வியாழக்கிழமையன்று அரசு தொலைக்காட்சி ஒன்றில் இச்செய்தி வெளியிடப்பட்டது.நாங்கள் அணு குண்டு செய்ய வேண்டும் என்றால்  யாருக்கும் பயப்படத்தேவையில்லை

Thursday, 23 June 2011

இணையதளங்களில் தகவல்களை திருடியவர் ஒரு மனநோயாளி:


         சி.ஐ.ஏ அமெரிக்க செனட் மற்றும் பல நிறுவனங்களின் இணையத்தளங்களில் ஊடுறுவிய குற்றத்துக்காக 19 வயது பிரிட்டிஷ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் சிறு வயது முதலே மன உளைச்சல் மற்றும் உணர்ச்சி வசப்படல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று அவரின் தாயார் றீட்டா கிளியர்லி தெரிவித்துள்ளார்.


தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சாவு:


    பள்ளிக்குச் செல்ல பெற்றோர் தடை விதித்ததைத் தொடர்ந்து மனம் உடைந்து தீக்குளித்த 12 ஆம் வகுப்பு மாணவி சிகிட்சை பலனின்றி மரணமடைந்தார்.நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள துலாச்சேரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி. விவசாயியான இவரது மகள் சுப்புலட்சுமி, மூலக்கரைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு முடித்திருந்தார்.

Saturday, 18 June 2011

நோயை வெளியே சொல்ல தயங்கும் இந்தியர்கள்:



      பிரிட்டன் வாழ் இந்தியர்கள் உட்பட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வந்துள்ள நீரிழிவு நோய் பாதிப்பை வெளியே சொல்லத் தயங்குகின்றனர்.இதனால் உணர்வுப்பூர்வமான மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Friday, 17 June 2011

2012ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும்: பிரான்ஸ் நிபுணர்கள் எச்சரிக்கை


      மத்திய அமெரிக்காவின் மாயா பிரிவினர் மக்கள் காலாண்டர் கணிப்புபடி இன்னும் 18 மாதத்தில் உலகம் அழியும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.இந்த கணிப்பு குறித்த பல்வேறு தரப்பிலும் கருத்துக்கள் எழத் துவங்கி உள்ளன. இந்த உலகம் அழியும் என்ற கணிப்பை பயன்படுத்தி ஆதாயம் தேட யாரும் முயற்சிக்க கூடாது என பிரான்ஸ் மத அமைப்புகள் மிஷன் அறிவுறுத்தி உள்ளது.


தடையை மீறி பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்


     முகத்தை மறைக்கும் பர்தா அணிந்து வந்த 2 பெண்கள் பிரான்ஸ் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர் ஆனார்கள்.கிழக்கு பாரிசில் உள்ள மாக்ஸ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் முகத்தை மறைக்கும் பர்தாவை அணிந்து அரசு உத்தரவுக்கு எதிப்பு தெரிவித்தவர்கள் ஆவார்கள்.பிரான்சில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு அரசு தடைவிதித்துள்ளது. 


இளைஞர்களின் குடிப்பழக்கத்திற்கு பெற்றோர்களே காரணம்: ஆய்வில் தகவல்


      பெற்றோர் தினமும் குடிப்பதை பார்க்கும் குழந்தைகள் அவர்களும் இளம் வயதில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.பிள்ளைகளை கவனிப்பதில் பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தாத காரணத்தாலும் இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகுகிறார்கள்.